சென்னையில் நடைபெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மகள் ருஷ்டா ரஹ்மான்- அல்தாப் நவாப் ஆகியோரது திருமண விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலந்து கொண்டு பசுமைக் கூடை மரக்கன்றுகளை வழங்கி, மணமக்களை வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் கலந்துகொண்டார். முதலமைச்சர் முக ஸ்டாலினுடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது குடும்பத்தினர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.