4 நாட்களிலேயே ரூ.50 கோடியை தாண்டியது சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ வசூல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ திரைப்படம் 4 நாட்களில் 50 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.
Maaveeran
MaaveeranTwitter

மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், யோகி பாபு, மிஷ்கின், சரிதா, சுனில் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவான திரைப்படம் ‘மாவீரன்’. கடந்த 14 ஆம் தேதி திரையரங்கில் வெளியான இத்திரைப்படம் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. வார விடுமுறை நாட்கள் முடிந்து நேற்று வாரத்தின் முதல் நாளிலும் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இப்படம் வெளியான 4 நாட்களில் 50+ கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உலக அளவில் 50.29 கோடி ரூபாய் வசூலித்துள்ள இப்படம், தமிழ்நாட்டில் மட்டும் 29.25 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ‘மாவீரன்’ படத்தை சாந்தி டாக்கீஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி சம்பளம் எதுவும் வாங்காமல், இயக்குநர் மடோன் அஸ்வினின் நட்புக்காக வாய்ஸ் ஓவர் கொடுத்ததாக தகவல் பரவி வருகிறது.

கதை சுருக்கம்!

கார்ட்டுனீஸ்ட் வேலைக்காக போராடிக்கொண்டிருக்கும் சத்யாவுக்கு சப் எடிட்டர் நிலா மூலமாக அந்த வேலையே கிடைக்கிறது. அதே சமயம், சத்யா வாழும் குடியிருப்புப் பகுதியை காலி செய்யும் மாநகராட்சி அவரின் குடும்பத்தையும், அந்த ஏரியா மக்களையும் அடுக்குமாடி குடியிருப்பில் அமர்த்துகிறது. அங்கு எல்லாமே பிரச்னையாய் இருக்க, அதையே கன்டென்ட்டாக மாற்றி கார்ட்டூன் ஆக்குகிறார் சத்யா. புதிய குடியிருப்பின் பிரச்னைகள் அதிகமாக, பிரச்னையே வேண்டாம் என எல்லாவற்றுக்கும் ஒதுங்கிப் போகும் கோழை சத்யாவுக்கு ஒரு சக்தி கிடைக்கிறது. அந்த சக்தி என்ன, கோழை எப்படி மாவீரன் ஆனான் என்பதே மடோன் அஷ்வின் இயக்கியிருக்கும் மாவீரன்.

இதையும் படிக்க..: கோழை டூ வீரன்... வீரன் டூ மாவீரன்..! சிவகார்த்திகேயனுக்கு இந்த மாவீரன் 'வீரமே ஜெயமா..?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com