\
Nayanthara
NayantharaToxic

Movie Promotion-ல் ஏன் கலந்துகொள்வதில்லை... நயன்தாரா விளக்கம்! | Nayanthara | Toxic

இந்தப் படத்துக்காக அவர் என்னை அழைத்த போது, படத்தில் நிறைய நடிகர்கள் இருந்தால் அதில் நடிக்க கூடாது என்ற முடிவில் இருந்தேன்.
Published on
Summary

பட புரொமோஷனில் கலந்துகொள்ளாததற்கு தனிப்பட்ட காரணம் இருப்பதாக நயன்தாரா விளக்குகிறார். யஷ் அழைத்ததால் மட்டுமே இந்த சிறப்பு பட நிகழ்வுக்கு வந்ததாக கூறுகிறார். இயக்குநர் கீது, தயாரிப்பாளர் வெங்கட், சக நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரின் தொலைநோக்கு பார்வை, யஷின் நான்கரை ஆண்டுகள் உழைப்பு ஆகியவை இந்த படத்தை வித்தியாசமாக்கும் என பாராட்டுகிறார்.

“படங்களின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கூடாது என்ற எந்த எண்ணமும் இல்லை. அது எனக்கு அவ்வளவு சரியாக வராது என்பதால் அதிலிருந்து நான் தள்ளியே இருக்கிறேன். ஆனால், இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். அதற்கு காரணம் யஷ் என்று நினைக்கிறேன். இந்த நிகழ்வுக்கு வர யஷுடைய ஒரு போன் கால் எனக்கு போதுமானதாக இருந்தது. மேலும் இப்படத்தின் உருவாக்கத்தில் பங்கெடுத்துள்ள தயாரிப்பாளர் வெங்கட் சார், சக நடிகைகள் ருக்மிணி, தாரா, ஹூமா, க்யாரா, ஒளிப்பதிவாளர் ராஜீவ் சார், இயக்குநர் கீது என அனைவருக்கும் தொலைநோக்கு பார்வை உள்ளது. 

Nayanthara pens a heartfelt note about her journey
Nayantharaஎக்ஸ் தளம்

நானும் கீதுவும் ஒரு படத்தில் இணைந்து நடித்துள்ளோம். அப்போது இருந்த கீது இப்போது நிறைய மாறி இருக்கிறார். இந்தப் படத்துக்காக அவர் என்னை அழைத்த போது, படத்தில் நிறைய நடிகர்கள் இருந்தால் அதில் நடிக்க கூடாது என்ற முடிவில் இருந்தேன். ஆனால் கீது அதற்கு பல கேள்விகளை கேட்டார், சரி நேரில் வந்து கதை சொல்ல சொன்னேன். இப்படி ஒரு இயக்குநரா என என்னை ஆச்சர்யப்பட வைத்துவிட்டார். இந்தப் படம் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தும். நடிகர்கள் அனைவருக்கும் கீது பக்கபலமாக இருந்தார்.

Nayanthara
CLASSROOM, CANTEEN, FOOTBALL GROUND.. கல்லூரி நினைவுகள் சொன்ன சூர்யா! | Suriya

ராக்கி பாய்... நான் பல உச்ச நட்சத்திரங்களோடு நடித்திருக்கிறேன். முதன்முதலில் யஷை சந்தித்த போது, அவர் சினிமாவில் எப்படி பார்த்தேனோ அப்படித்தான் நிஜத்திலும் இருந்தார். நான் ராக்கி பாயின் ராஜ்ஜியத்துக்குள் நுழைகிறேனா என்பது போல உணர்ந்தேன். மேலும் இப்படி உழைப்பை கொடுக்கும் ஒரு நடிகரை நான் பார்த்ததே இல்லை. தன் வாழ்க்கையில் இருந்து நான்கரை ஆண்டுகளை இந்தப் படத்துக்காக கொடுத்துவிட்டார். தனிப்பட்ட வாழ்க்கையை தியாகம் செய்து இந்தப் படத்துக்காவே தன்னை ஒப்புக்கொடுத்தார்.

Nayanthara
அம்மாவிடம் கண்டிப்பா கேட்கணும்.. அப்பா தான் இதுக்கு காரணம்! சங்கீதா-விஜய் குறித்து ஜேசன் நெகிழ்ச்சி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com