Karthik Subbaraj request the audience to watch Neelira in Theatre
Karthik SubbarajNeelira

"OTT-இல் பார்க்கலாம் என்று நினைக்க வேண்டாம்" - கார்த்திக் சுப்பாராஜ் வேண்டுகோள் | Neelira

பல வருடங்களாக சிலுவையில் அறையப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் சினிமாவை உயிர்த்தெழச் செய்ய உங்களால் மட்டுமே முடியும். தயவுசெய்து எங்கள் திரைப்படத்தை திரையரங்குகளில் சென்று பாருங்கள்.
Published on

சோமீதரன் இயக்கத்தில் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியான படம் `நீளிரா'. இப்படத்துக்கு விமர்சகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது. மேலும் சினிமா பிரபலங்கள் பலரும் இப்படம் குறித்து பாராட்டி பேசினார்கள். இந்நிலையில் இப்படம் குறித்து அதன் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பாராஜ் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், "என் அன்பான தமிழ் ரசிகர்களே, ’நீளிரா’ திரைப்படம் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியானது. வெளியான நாளிலிருந்தே இந்தப் படம், இதைக் கண்டுகளித்த ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் மிகவும் அபாரமான வரவேற்பைப் பெற்றுள்ளது. சோமீதரன் என்கிற ஈழத்துப் படைப்பாளியின் முதல் படமான ’நீளிரா’, இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக உருவாகியுள்ள ஈழத் தமிழ் திரைப்படம் என்பதால், இதை ஒரு மெயின்ஸ்ட்ரீம் திரையரங்கு வெளியீடாக கொண்டுவர பல சவால்களை எதிர்கொண்டோம். அந்தச் சவால்களை கடந்து நாங்கள் அதைச் சாதித்துள்ளோம். உணர்வுரீதியாக எங்களுக்கு இது மிகப்பெரிய வெற்றி படம். கோடிகோடியாக லாபம் வரும் என்ற நோக்கத்துடன் இந்தப் படத்தை நாங்கள் தயாரிக்கவில்லை. ஈழத்துப் போரைச் சார்ந்த உண்மையான கதைகளையும், படைப்புகளையும், படைப்பாளிகளையும் உலக சினிமா அரங்குகளில் அவர்களின் குரல் கேட்கும் வகையில் ஓர் இடம் உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

Karthik Subbaraj request the audience to watch Neelira in Theatre
"விஜய் சார் என்னையும் சேர்த்து 13 பேர சுட்டார்" - விக்னேஷ் சிவன் சொன்ன ஃபிளாஷ்பேக் | Vignesh Shivan

இது ஒரு தொடக்கம். A great start for a film movement! ஆனால், இந்த தொடக்கம் வளர்ந்து, இனிவரும் காலங்களில் இதைப் போன்ற கதைகளும் படைப்பாளிகளும் சினிமாவிற்கு வர வேண்டும் என்றால், வியாபாரரீதியாக திரையரங்குகளுக்கு ஒரு சிறிய நம்பிக்கையைக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தொடக்கத்தில் குறைந்த திரைகளில்தான் வெளியிட்டோம். குறைந்த திரைகளே கிடைத்தன. புனித வெள்ளியில் தொடங்கி, வாய்மொழி பாராட்டு (Word of Mouth) பரவி, மேலும் பலரும் திரையரங்குகளுக்கு வந்து, ஞாயிற்றுக்கிழமை -Easter நாளில் மக்கள் ஆதரவால் எங்கள் படம் உயிர்த்தெழும் என்று உறுதியாக நம்பினோம்.

Karthik Subbaraj
Karthik SubbarajNeelira

ஆனால் ஈழத் தமிழ் சினிமாவுக்கான Easter இன்னும் வரவில்லை. பல வருடங்களாக சிலுவையில் அறையப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் சினிமாவை உயிர்த்தெழச் செய்ய உங்களால் மட்டுமே முடியும். தயவுசெய்து எங்கள் திரைப்படத்தை திரையரங்குகளில் சென்று பாருங்கள். அது உங்கள் நேரத்திற்கும் பணத்திற்கும் நிச்சயமாக மதிப்புடையதாக இருக்கும். இந்தப் படத்திற்கான OTT ஒப்பந்தம் இன்னும் முடிவாகவில்லை. எனவே, சில வாரங்களில் OTT-இல் பார்க்கலாம் என்று நினைக்க வேண்டாம். சினிமாவின் உயிர்த்தெழுதல் திரையரங்குகளில்தான் நிகழும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com