“எனக்காகக் கெஞ்சியவர் கவிஞர் கண்ணதாசன்” - சங்கர் கணேஷ்

“எனக்காகக் கெஞ்சியவர் கவிஞர் கண்ணதாசன்” என இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர்களில் இன்றும் முதன்மையானவராக, எல்லாப் பாடல் ஆசிரியர்களுக்கும் பிதாமகனாக விளங்குபவர் கவிஞர் கண்ணதாசன். அவருடைய 97வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது உருவ சிலை மற்றும் புகைப்படங்களுக்கு அரசு, திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் சார்பிலும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அவரால் உருவான இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ், “எனக்காகக் கெஞ்சி வாய்ப்பு தேடித் தந்தவர் கவிஞர் கண்ணதாசன். இந்நாளில் அவருக்கு அனைவரும் வாழ்த்தி சொல்லி அவரது ஆத்மா சாந்தியடைய செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து (சங்கர்) கணேஷ் பேசிய கருத்துகளைக் கேட்க இந்த வீடியோவைப் பார்க்கவும்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com