“முதல் படம் வெற்றியடைந்தால் இயக்குனர்களுக்கு பைத்தியம் பிடித்து விடும்”- மிஸ்கின்

“முதல் படம் வெற்றியடைந்தால் இயக்குனர்களுக்கு பைத்தியம் பிடித்து விடும்”- மிஸ்கின்
“முதல் படம் வெற்றியடைந்தால் இயக்குனர்களுக்கு பைத்தியம் பிடித்து விடும்”- மிஸ்கின்

ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள செல்ஃபி திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குனர் மிஸ்கின் கலந்து கொண்டு பேசினார்.  அதில் சினிமாவில் தங்களின் முதல் படம் வெற்றியடைந்துவிட்டால் இயக்குனர்களுக்கு பைத்தியம் பிடித்துவிடும். அடுத்தப்படத்தில் உலகத்தை மாற்ற வேண்டும் என்று எண்ணுகிறார்கள் எனவும் தெரிவித்தார்.

அப்படிதான் நானும் இருந்தேன், நினைத்தேன் என கூறினார். மேலும் உதவி இயக்குனர்கள் Gosipp பேசுவதை விட்டுவிட்டு, நல்ல விஷயங்களை மட்டும் பேச வேண்டும்.  நெகட்டிவ்வான விஷயங்களை பேசக்கூடாது. அப்படி நல்ல விஷயங்களை மட்டும் பேசும்பொழுது அது வெற்றிக்கு நம்மை அழைத்து செல்லும் என கூறினார். அந்த வகையில் இயக்குனர் வெற்றிமாறன் ஆரம்ப காலத்திலேயே சினிமாவைப் பற்றியும்,  நல்லவை பற்றியும் மட்டுமே பேசுவார் சிந்திப்பார் என புகழாரம் சூட்டினார். எனவே, அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி செல்ஃபி படத்தை இயக்கியுள்ள மதிமாறன் அதை கடைபிடிக்க வேண்டுமென வேண்டுகோள் வைத்தார். செல்ஃபி திரைப்படம் வரும் ஒன்றாம் தேதி வெளியாகிறது. அந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தமிழகத்தில் வெளியிடுகிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com