சைக்கிளில் வந்து வாக்களித்தது ஏன்? - நடிகர் விஜய் தரப்பு விளக்கம்

சைக்கிளில் வந்து வாக்களித்தது ஏன்? - நடிகர் விஜய் தரப்பு விளக்கம்
சைக்கிளில் வந்து வாக்களித்தது ஏன்? - நடிகர் விஜய் தரப்பு விளக்கம்

தனது வீட்டுக்கு அருகில் உள்ள வாக்குச்சாவடி பகுதி, காரை நிறுத்த முடியாத அளவுக்கு சின்ன சந்து என்பதால் மட்டுமே சைக்கிளில் வந்து வாக்களித்ததாக நடிகர் விஜய் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

சென்னை நீலாங்கரையில் இருக்கும் வாக்குச்சாவடிக்கு இன்று சைக்கிளில் வந்து வாக்களித்தார் நடிகர் விஜய். இதுதொடர்பான வீடியோவும், புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகின.

சாமானியரில் ஒருவராக இப்படிச் செய்தார், எளிமையை வெளிப்படுத்தவே இப்படிச் செய்தார், கவனத்தை ஈர்க்கவே இப்படிச் செய்தார் என பல்வேறு விதமாக விவாதப்பொருள் ஆனது, விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்த நிகழ்வு.

இதனிடையே, பெட்ரோல் விலை உயர்வை குறிக்கும் வகையில்தான் விஜய் சைக்கிளில் வந்திருப்பார் என்று திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், உண்மையான காரணம் குறித்து நடிகர் விஜய்யின் பி.ஆர்.ஓ ரியாஸ் கூறும்போது, "விஜய் சைக்கிளில் வந்த காரணம், அவர் வீட்டுக்கு அருகில் பூத் இருந்ததும், சின்ன சந்து என்பதால் காரை நிறுத்த முடியாது என்பதும் மட்டுமே" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com