“சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிக்க ஆசை” - தமன்னா

“சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிக்க ஆசை” - தமன்னா

“சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிக்க ஆசை” - தமன்னா
Published on

சூர்யாவுடன் மீண்டும் நடிக்க விரும்புவதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.

தமன்னா நடித்து தமிழில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ‘ஆக்‌ஷன்’. சுந்தர் சி இயக்கிய இந்தப் படத்தில் விஷாலுடன் அவர் இணைந்து நடித்திருந்தார். இவர் தற்போது தெலுங்கில் ‘மகாலக்ஷ்மி’ படத்தில் நடித்து வருகிறார். இது கங்கனா ரனாவத் நடித்திருந்த ‘குயின்’ படத்தின் ரீமேக் ஆகும்.

இந்நிலையில் இவர் நேற்று அவரது ரசிகர்களின் கேள்விக்கு ட்விட்டரில் பதிலளித்தார். அப்படி கேள்வி எழுப்பும் ரசிகர்கள் #AskTamannaah என்ற ஹேஷ்டேக் போட்டு கேட்கும்படி கூறியிருந்தார். ஒரு பெண் ரசிகை 10 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டா பக்கத்தில் பெற்றுள்ளீர்கள் அதைக் குறித்து உங்களின் கருத்தை சொல்ல வேண்டும் என்றதற்கு, ‘அனைவரின் அன்புக்கு என்னுடைய நன்றி’ என்றும் தெரிவித்தார்.

மேலும் ஒரு கேள்விக்கு அவர் மிகவும் தன்னம்பிக்கையோடு பதிலளித்திருந்தார். தோல்வியை எவ்வாறு சமாளிப்பது? என்ற கேள்விக்குப் பதிலளித்த தமன்னா, ‘தோல்வி உங்களை இடையில் நிறுத்திக் கொள்ளவும் பிரதிபலிக்கவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. எனவே அது மீண்டும் புதியதாக மற்றும் அற்புதமான ஒன்றைத் தொடங்குவதற்கான அடிப்படையாக அமைகிறது” என்றும் தெரிவித்துள்ளார்.

மற்றொருவர் சூர்யாவுடன் நடிக்க வாய்ப்புள்ளதா? என்றும் சூர்யாவுடன் நடிக்க வேண்டும் என்பது ஒரு கனவு என்றும் கூறியிருந்தார். அவர் கேள்விக்குப் பதிலளித்த தமன்னா, ‘மீண்டும் சூர்யாவுடன் சேர்ந்து நடிக்க விம்பும்கிறேன். அவருடன் பணியாற்றுவது ஒரு கனவு’ என்று கூறியுள்ளார்.

சூர்யாவும் தமன்னாவும் கடைசியாக கே.வி. ஆனந்த் இயக்கிய ‘அயன்’ படத்தில் ஒன்றாக இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com