\
தாத்தா ஆனார் டி.ராஜேந்தர்

தாத்தா ஆனார் டி.ராஜேந்தர்

தாத்தா ஆனார் டி.ராஜேந்தர்
Published on

லட்சிய திமுக தலைவரும் நடிகருமான டி.ராஜேந்தர், தாத்தா ஆனார்.

டி.ராஜேந்தரின் மகள் தமிழ் இலக்கியாவுக்கும் ஹைதராபாத்தை சேர்ந்த அபிலாஷ் என்பவருக்கும் கடந்த 2014ம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்தது. கர்ப்பமாக இருந்த தமிழ் இலக்கியா, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக நேற்று அனுமதிக்கப்பட்டார்.இன்று காலை அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பேரன் பிறந்த மகிழ்ச்சியை மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி டி.ராஜேந்தர், உஷா ராஜேந்தர், சகோதரர் சிலம்பரசன் ஆகியோர் கொண்டாடினர். இதன் மூலம் டி.ராஜேந்தர் தாத்தாவாகியுள்ளார். சிம்பு, மாமாவாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com