”நீங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் சுஷாந்த்”- சகோதரியின் பதிவால் ரசிகர்கள் நெகிழ்ச்சி

”நீங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் சுஷாந்த்”- சகோதரியின் பதிவால் ரசிகர்கள் நெகிழ்ச்சி
”நீங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் சுஷாந்த்”- சகோதரியின் பதிவால் ரசிகர்கள் நெகிழ்ச்சி

மறைந்த நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத்தின் சகோதரி ஸ்வேதாசிங் கீர்த்தி சுஷாந்த் சிங் தொடர்பான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவர் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில் இணைத்த புகைப்படத்தில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை நினைவுகூறும் வகையில் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பெஞ்சில் அவரது பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், “சுஷாந்த்சிங் ராஜ்புத், நடிகர், தீவிர வானியலாளர், சுற்றுச்சூழல் ஆய்வாளர், மனிதாபிமானி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


அதனைத்தொடர்ந்து அவரது பதிவில், “சுஷாந்த் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரின் பெயர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இதுதான் தூய ஆன்மாவின் தாக்கம். நீங்கள் கடவுளின் குழந்தை, எனது குழந்தையே. நீங்கள் எப்போதும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பீர்கள்” என்று பதிவிட்டுள்ளார். இந்தப்பதிவு தற்போது சுஷாந்த் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, நேற்று முன் தினம் வெளியான 67 ஆவது தேசிய விருதுகள் பட்டியலில் சுஷாந்த் சிங் நடிப்பில் இந்தியில் வெளியான சிச்சோரே சிறந்த இந்தி படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. அந்த விருதை அந்தப்படத்தின் தயாரிப்பாளர் சுஷாந்த் சிங் ராஜ்புத்திற்கு அர்ப்பணித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com