விஷ்ணு விஷால் தந்தைக்கு எதிரான புகார்: சூரி தொடர்ந்த வழக்கிலிருந்து நீதிபதி திடீர் விலகல்

விஷ்ணு விஷால் தந்தைக்கு எதிரான புகார்: சூரி தொடர்ந்த வழக்கிலிருந்து நீதிபதி திடீர் விலகல்
விஷ்ணு விஷால் தந்தைக்கு எதிரான புகார்: சூரி தொடர்ந்த வழக்கிலிருந்து  நீதிபதி திடீர் விலகல்

நடிகர் சூரி சம்பளம் பிரச்னை தொடர்பான வழக்கை விசாரித்து வந்த நீதிபதி அந்த வழக்கில் இருந்து விலகியுள்ளார். 

நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ளப் படம் வீரதீரசூரன். இப்படம் சம்பளம் தொடர்பாக விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் டிஜிபியுமான ரமேஷ் குடவாலா மற்றும் அப்படத்தின் தயாரிப்பாளர் அன்பு ராஜன் ஆகியோர் தன்னை ஏமாற்றி விட்டதாக சூரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது காவல்நிலையத்தில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே இந்த வழக்கில் விஷ்ணு விஷாலின் தந்தை காவல் அதிகாரியாக இருப்பதால் அவருக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்படுவதாகவும், வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார். 

வழக்கு தொடர்பாக ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் முன்ஜாமீன் கோரியிருந்த நிலையில் தற்போது அந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா விலகுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com