“என் கணவர் அடித்து துன்புறுத்துகிறார்” - சுந்தரா டிராவல்ஸ் கதாநாயகி போலீசில் புகார்

“என் கணவர் அடித்து துன்புறுத்துகிறார்” - சுந்தரா டிராவல்ஸ் கதாநாயகி போலீசில் புகார்
“என் கணவர் அடித்து துன்புறுத்துகிறார்” - சுந்தரா டிராவல்ஸ் கதாநாயகி போலீசில் புகார்

காவல் உதவி ஆய்வாளரான தனது கணவர் தன்னை அடித்து துண்புறுத்துவதாக 'சுந்தரா டிராவல்ஸ்' நடிகை ராதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை சாலிகிராமம் லோகையா தெருவை சேர்ந்தவர் சினிமா நடிகை ராதா (39). இவர் சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தை உள்ள நிலையில், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விவாகரத்து செய்து விட்டு தனியாக வாழ்ந்து வந்தார்.

அதேபோல எண்ணூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருக்கும் வசந்தராஜா என்பவருக்கு திருமணமாகி இரண்டு குழுந்தைகள் உள்ள நிலையில் அவர்கள் ஆர்ஏ புரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வசந்தராஜாவுக்கும் நடிகை ராதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இது காதலாக மாறிய நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து கடந்த ஓராண்டாக வசந்தராஜா சாலிகிராமத்தில் நடிகை ராதாவுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் வசந்தராஜாவுக்கும் நடிகை ராதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது. நடிகை ராதாவை உதவி ஆய்வாளர் வசந்தராஜா அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்தி கொடுமைபடுத்துவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகை ராதா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் உதவி ஆய்வாளர் வசந்தராஜாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com