கடந்த 48 மணி நேரமாக எஸ்பிபி உடல்நிலை சீராக உள்ளது : மகன் சரண்

கடந்த 48 மணி நேரமாக எஸ்பிபி உடல்நிலை சீராக உள்ளது : மகன் சரண்
கடந்த 48 மணி நேரமாக எஸ்பிபி உடல்நிலை சீராக உள்ளது : மகன் சரண்

கடந்த 48 மணி நேரமாக எஸ்பிபி உடல்நிலை சீராக உள்ளது என அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார்.

பின்னணி சினிமாப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது என நேற்று மருத்துவமனை தரப்பில் அறிவிப்பு வெளியானது.

இதனிடையே எஸ்பிபி உடல்நலம் பெற வேண்டும், மீண்டு வர வேண்டும் என சினிமா பிரபலங்கள், கலைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களும் அவருக்காக பிரார்த்தனை மேற்கொண்டனர். இந்நிலையில், எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 48 மணி நேரமாக எஸ்பிபி உடல்நிலை சீராக உள்ளது. இது நல்ல அறிகுறி. எல்லோருடைய அன்பிற்கும் பிரார்த்தனைக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com