எஸ்.பி.பி-க்கு கொரோனா நெகட்டிவ் : மகன் சரண் தகவல்

எஸ்.பி.பி-க்கு கொரோனா நெகட்டிவ் : மகன் சரண் தகவல்

எஸ்.பி.பி-க்கு கொரோனா நெகட்டிவ் : மகன் சரண் தகவல்
Published on

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்திருப்பதாக அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார்.

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை குறித்து வீடியோ வெளியிட்டுள்ள சரண், தனது தந்தை உடல்நிலை முன்னேற்றம் அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் வெண்டில்லேட்டர் உதவியுடனே இன்னும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அதேசமயம் நல்ல செய்தியாக அவருக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன் எஸ்.பி.பாலசுப்ரமணியன் தனது ஐ-பேட் மூலம் கிரிக்கெட், டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளை காண்பதாகவும், விரைவில் தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டியை அவர் காண ஆர்வத்துடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அவர் நன்றாக எழுதுவதாகவும், தங்களிடம் நன்றாக தொடர்புகொள்வதாகவும் சரண் கூறியிருக்கிறார். அனைவரது அன்பாலும், நம்பிக்கையாலும் அவர் விரைவில் மீண்டு வருவார் என்றும், அடுத்த வாரம் தனது பெற்றோருக்கு திருமண நாள் கொண்டாட்டத்தை சிறிய அளவில் நடத்தவுள்ளதாகவும் சரண் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் சென்னை, அமைந்தகரையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com