எஸ்.பி.பி பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ திறந்த டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவி!

எஸ்.பி.பி பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ திறந்த டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவி!

எஸ்.பி.பி பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ திறந்த டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவி!
Published on

இந்தியாவின் முன்னணி பாடகரான எஸ்.பி.பி கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்காக இந்திய திரையுலகமே பிரார்த்தனை செய்தபோதும் சிகிச்சை பலனளிக்காமல் செப்டம்பர் 25 ஆம் தேதி காலமானார்.

இந்நிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக எஸ்.பி.பி பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ ஆரம்பிக்கப்படும் என்று டப்பிங் யூனியன் செயற்குழுவில் நடிகர் ராதாரவி செப்டம்பர் 30 ஆம் தேதி தீர்மானம் இயற்றினார். எஸ்.பி.பி டப்பிங் யூனியனின் வாழ்நாள் உறுப்பினர் என்பதால் அவரது சாதனைகளை கெளரவிக்கும் விதமாக இந்த தீர்மானம் இயற்றப்படுள்ளது என்று ராதாரவி அப்போது கூறியிருந்தார்.

இந்நிலையில், சவுத் இண்டியன் சினி டி.வி ஆர்டிஸ்ட்ஸ் அன்ட் டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியனில், எஸ்.பி.பி நினைவாக, ’எஸ்.பி.பி ஸ்டுடியோ’ என்ற பெயரில், டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவி தலைமையில், செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் டப்பிங் ஸ்டுடியோ திறக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com