''பல வாக்குறுதிகளை முன்வைத்திருக்கிறோம்; அதை நிறைவேற்றுவோம்'' - கே.பாக்யராஜ் உறுதி

''பல வாக்குறுதிகளை முன்வைத்திருக்கிறோம்; அதை நிறைவேற்றுவோம்'' - கே.பாக்யராஜ் உறுதி
''பல வாக்குறுதிகளை முன்வைத்திருக்கிறோம்; அதை நிறைவேற்றுவோம்'' - கே.பாக்யராஜ் உறுதி

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் கே. பாக்யராஜ் மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையிலான 2 அணிகளும் போட்டியிட்டது. மாலை நான்கு மணிக்கு நிறைவடைந்த வாக்கெடுப்புக்குப் பின், 192 வாக்குகள் பெற்ற பாக்யராஜ் வெற்றியடைந்தார் என அறிவிக்கப்பட்டது.

தலைவர் பதவியில் வெற்றி பெற்றுள்ள பாக்யராஜ் பத்திரிகையாளர்களை சந்தித்த போது "இது எங்கள் அணியின் வெற்றி மட்டுமல்ல; சங்கத்தின் வெற்றியாக கருதுகிறோம். ஏனென்றால் எழுத்தாளர்கள் சங்கத்திற்கு நல்லது நடக்க வேண்டும் என்ற நம்பிக்கையில்தான் இந்த வெற்றியை வழங்கியிருக்கிறார்கள். கதைப் பாதுகாப்பு, கதை மற்ற மொழிகளுக்கு செல்லும்போது அதற்குரிய உரிமை போன்ற பல வாக்குறுதிகளை முன்வைத்திருக்கிறோம். அதை நிறைவேற்றுவோம்.

இதில் நாங்கள் வென்றோம், அவர்கள் வெற்றி பெறவில்லை என்றெல்லாம் பிரிவில்லாமல் எல்லோரும் சங்கத்துக்காக ஒற்றுமையாய் தான் பணியாற்ற இருக்கிறோம். ஒரே அணியாய் இருந்து செயல்படுவோம்" என்றார். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் என்பது தமிழ்நாடு திரைப்பட எழுத்தாளர் சங்கம் எனப் பெயர் மாற்றப்படுமா என்று கேட்டபோது "அதைப் பற்றி இப்போது உடனடியாக கூற முடியாது. எல்லோரிடமும் கலந்து ஆலோசித்து கூறுவோம்" என்றார் பாக்யராஜ்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com