`கடவுள் அருளாலும், பெற்றோர் ஆசியாலும்...’- 2வது மகனை வரவேற்ற சவுந்தர்யா ரஜினிகாந்த்

`கடவுள் அருளாலும், பெற்றோர் ஆசியாலும்...’- 2வது மகனை வரவேற்ற சவுந்தர்யா ரஜினிகாந்த்
`கடவுள் அருளாலும், பெற்றோர் ஆசியாலும்...’- 2வது மகனை வரவேற்ற சவுந்தர்யா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா- விசாகன் திருமணம் சென்னை, எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் கடந்த 2019 பிப்ரவரியில் நடந்தது. இந்த திருமண உறவில், சவுந்தர்யா - விசாகன் தம்பதிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ரஜினிகாந்தின் இளைய மகளான சவுந்தர்யா, சினிமாவில் கிராஃபிக்ஸ் டிசைனரான பணியாற்றியவர். சந்திரமுகி, சிவாஜி, கோச்சடையான் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். தொழிலதிபர் விசாகன் வணங்காமுடி என்பவருடன் சவுந்தர்யாவுக்கு 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது

விசாகன், சென்னையில் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். `வஞ்சகர் உலகம்’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

2019-ல் திருமணமான இத்தம்பதிக்கு, தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து சமூகவலைதளத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார் அவர். தனது அந்தப் பதிவில், `கடவுளின் அன்புடனும் எங்கள் பெற்றோரின் ஆசிர்வாதத்துடனும் விசாகன், வேத் (மூத்த மகன்) மற்றும் நான் அனைவருமே வேத்-தின் குட்டி தம்பி `வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி’யை இன்று 11/9/22 வரவேற்கிறோம். பிரசவ சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு, நன்றியை உரித்தாகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து சவுந்தர்யாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com