''இனி பற்றி எரியட்டும், எனக்கு கவலையில்லை'' - ட்விட்டரில் இருந்து வெளியேறிய நடிகை சோனாக்ஷி

''இனி பற்றி எரியட்டும், எனக்கு கவலையில்லை'' - ட்விட்டரில் இருந்து வெளியேறிய நடிகை சோனாக்ஷி
''இனி பற்றி எரியட்டும், எனக்கு கவலையில்லை'' - ட்விட்டரில் இருந்து வெளியேறிய நடிகை சோனாக்ஷி

தனது ட்விட்டர் கணக்கை மூடிவிட்டு ட்விட்டர் தளத்தில் இருந்து நடிகை சோனாக்ஷி சின்ஹா வெளியேறியுள்ளார்

இந்தி நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா. பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ள சோனாக்ஷி தமிழில் ரஜினிக்கு ஜோடியாக ‘லிங்கா’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் தன்னுடைய ட்விட்டர் கணக்கை மூடிவிட்டு ட்விட்டர் தளத்தில் இருந்து நடிகை சோனாக்ஷி சின்ஹா வெளியேறியுள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர்,


'எதிர்மறையான விஷயங்களில் இருந்து விலகி இருப்பதுதான், மன ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்வதற்கான முதல்படி. இப்போதெல்லாம் ட்விட்டரில்தான் எதிர்மறை விஷயங்கள் அதிகமாக இருக்கின்றன. நான் எனது கணக்கைச் செயலிழக்கச் செய்கிறேன்' என்று கூறியுள்ளார். இது தொடர்பான ஸ்கிரீன் ஷாட்டையும் தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இனி பற்றி எரியட்டும், எனக்கு கவலையில்லை என தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் உயிரிழப்புக்குப் பிறகு வாரிசு நடிகர்களை இணையவாசிகள் அதிகம் விமர்சனம் செய்து வருகின்றனர். நெபோட்டிசம் தொடர்பான தொடர் கருத்துகள், தொடர் கேள்விகள் என ட்விட்டர் பக்கங்கள் நிரம்பி கிடக்கின்றன. இதனை சமாளிக்க முடியாமல் தான் ட்விட்டர் பக்கத்தில் இருந்து சோனாக்ஷி சின்ஹா வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. இன்ஸ்டாவிலும் மற்றவர்கள் கமெண்ட் செய்யும் வசதியை சோனாக்ஷி தடை செய்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
View this post on Instagram

Aag lage basti mein... mein apni masti mein! Bye Twitter ??

A post shared by Sonakshi Sinha (@aslisona) on

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com