சதீஷ் குமாருக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த சர்பரைஸ் பரிசு

சதீஷ் குமாருக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த சர்பரைஸ் பரிசு
சதீஷ் குமாருக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த சர்பரைஸ் பரிசு

நடிகர் சிவகார்த்திகேயன் காமென்வெல்த் வீரருக்கு அன்பு பரிசு கொடுத்து அசத்தியுள்ளார்.

2018 ஆண்டிற்கான காமென்வெத் போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து முடிந்தது. அதில் 77 கிலோ எடைப் பிரிவான பளுத்தூக்கும் போட்டியில் பங்கேற்ற சதீஷ் சிவலிங்கம் தங்கப் பதக்கத்தை வென்றார். தமிழகத்தை சார்ந்த இவர் உலக அளவில் நடைப்பெற்ற போட்டியில் தங்கம் வென்றதை பலரும் பாரட்டி இருந்தனர்.  இதனை அடுத்து அவரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது வீட்டிற்கு அழைத்து சந்தித்துள்ளார். அப்போது அவரது சாதனை குறித்து வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் சிவகார்த்திகேயன் அன்பான பரிசு ஒன்றையும் வழங்கியிருக்கிறார். இச்சந்திப்பிற்கான புகைப்படத்தை சதீஷ் குமார் சிவலிங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். 

மேலும் இச்சந்திப்புக் குறித்து சதீஷ், “என்ன ஒரு அற்புதமான மனிதரை சந்தித்தேன். காமென்வெல்த் தங்கப்பத்தத்துடன் அவரை சந்தித்தது உண்மையில் அன்பு நிறைந்ததாக இருந்தது. அவரது பேச்சும் வரவேற்பும் உற்சாகம் அளிப்பதாக இருந்தது. நான் மதிக்கும் கொண்டாடும் நடிகர் அவர். அவரது கடின உழைப்புதான் அவரை வாழ்க்கையில் மேலே கொண்டு சென்றுள்ளது. மிகவும் நன்றி சகோதரா.. உங்களின் அன்பான பரிசுக்கு” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com