எஸ்பிபி உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம் - அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளோடு சிகிச்சை

எஸ்பிபி உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம் - அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளோடு சிகிச்சை
எஸ்பிபி உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம் - அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளோடு சிகிச்சை

பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் கொரோனா நோய் தொற்று காரணமாக பின்னணி பாடகர் எஸ்பிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து எக்மோ கருவி மற்றும் வெண்டிலேட்டர் கருவிகள் உதவிகளுடன் சிகிச்சைப்பெற்று வந்தார். தொடர்ந்து உடலில் முன்னேற்றம் ஏற்பட்டு சில நாட்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா நெகட்டிவ் வந்தது.

இதைத்தொடர்ந்து சில நாட்களாக உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் எஸ்பிபியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சைப்பெற்று வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எக்மோ, வெண்டிலேட்டர் கருவிகள் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com