இசைக்கருவிக்கு அனுமதி இல்லையா? ஏர்லைன்சை விளாசிய பாடகி ஸ்ரேயா கோஷல்

இசைக்கருவிக்கு அனுமதி இல்லையா? ஏர்லைன்சை விளாசிய பாடகி ஸ்ரேயா கோஷல்
இசைக்கருவிக்கு அனுமதி இல்லையா? ஏர்லைன்சை விளாசிய பாடகி ஸ்ரேயா கோஷல்

தனது இசைக்கருவியை விமானத்தில் அனுமதிக்காக, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை விமர்சித்துள்ளார் பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல்

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல்வேறு மொழி படங்களில் பாடி வருபவர் ஸ்ரேயா கோஷல். வெளிநாடுகளில் நடக்கும் இசை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். சமீபத்தில் வெளிநாடு செல்வதற்காக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் டிக்கெட் புக் செய்திருந்தார். அதன்படி சென்றார். ஆனால், அவர்கள் அவர் வைத்திருந்த இசைக்கருவியை அனுமதிக்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதுபற்றி அவர் விளக்கமாகக் கூறியும் விமான நிறுவனம் மறுத்துவிட்டது. 

இதையடுத்து ட்விட்டரில், இசை கலைஞர்களோ அல்லது மற்றவர்களோ தங்களின் இசைக் கருவிகளோடு பயணிக்க வேண்டாம் என்று நினைக்கிறது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ். நல்லது. பாடம் கற்றுக்கொண்டதற்கு நன்றி’’ என்று கோபமாகத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரேயாவின் ட்வீட்டை பார்த்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளது. அதோடு அவரின் புகார் குறித்த விவரங்களையும், விமான நிறுவனத்தினர் என்ன அறிவுரை வழங்கினார்கள் என்பதையும் தெரிவிக்க முடியுமா?  என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com