நவ. 9 முதல் பாண்டிச்சேரியில் சிம்பு: எதற்காகத் தெரியுமா?

நவ. 9 முதல் பாண்டிச்சேரியில் சிம்பு: எதற்காகத் தெரியுமா?
நவ. 9 முதல் பாண்டிச்சேரியில் சிம்பு: எதற்காகத் தெரியுமா?

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் ஷூட்டிங் வரும் நவம்பர் 9 ஆம் தேதி முதல் பாண்டிச்சேரியில் துவங்கவிருக்கிறது. 

கடந்த 2018 ஆம் ஆண்டு சிம்பு மாநாடு படத்தில் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் சிம்புவுக்கும் இடையே மோதல் வெடித்ததால், அப்படம் கைவிடப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி மீண்டும் தொடங்கவிருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், இரு தரப்பும் ஒற்றுமையாக இருந்தாலும் கொரோனா தடையாக இத்தனை மாதம் இருந்து வந்தது. 

இந்நிலையில், தமிழக அரசு சினிமா ஷூட்டிங் நடத்த அனுமதி வழங்கியதால் அடுத்தமாதம் படத்தின் ஷூட்டிங் துவங்கவுள்ளது என்று அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கடந்த மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். தற்போது, சுசீந்திரன் இயக்கிவரும் ஈஸ்வரன் படத்தில் நடிக்கும் சிம்பு வசனக்காட்சிகள் உட்பட அனைத்து காட்சிகளையும் முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘மாநாடு’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு வரும் நவம்பர் 9 ஆம் தேதிமுதல் பாண்டிச்சேரியில் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com