ஓடிடியில் வெளியாகும் செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை'!

ஓடிடியில் வெளியாகும் செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை'!

ஓடிடியில் வெளியாகும் செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை'!
Published on

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யா நடித்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் ஓடிடியில் வெளியாகிறது.

செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டே உருவான 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் பல்வேறு தடைகளுக்கிடையே கடந்த மார்ச் 5 ஆம் தேதி செல்வராகவன் பிறந்தநாளையொட்டி தியேட்டர்களில் வெளியானது. கொரோனா இரண்டாவது அலையின் சூழலிலும் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா உள்ளிட்டோர் நடித்த இப்படமும், பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக, எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பு கவனம் ஈர்த்தது.

அதேசமயம், தியேட்டருக்கு செல்லமுடியாத ரசிகர்கள் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்று காத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில், ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ரம்ஜான் பண்டிகையையொட்டி மே 14 ஆம் தேதி ஓடிடி தளமான ஜீ5 ல் வெளியாகிறது என்று தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதனால், செல்வராகவன் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com