“கொடி மேல் இருக்கும் அக்கறை நாட்டு குடி மேல் இல்லையே”- சீமான்

“கொடி மேல் இருக்கும் அக்கறை நாட்டு குடி மேல் இல்லையே”- சீமான்
“கொடி மேல் இருக்கும் அக்கறை நாட்டு குடி மேல் இல்லையே”- சீமான்

வீட்டுக்கு வீடு கொடியேற்ற வேண்டும் எனக் கூறும் மத்திய அரசுக்கு, கொடி மேல் இருக்கும் அக்கறை நாட்டு குடி மேல் இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், கோபிநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜிவி - 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. வெற்றி, கருணாகரன், அஸ்வினி, ரோகிணி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், எல்லோருக்கும் அவர்கள் படங்களை திரையரங்கில் வெளியிட வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும், ஆனால் தற்போதைய சூழல் வேறு மாதிரியாக இருப்பதாகவும் தெரிவித்தார். வீட்டுக்கு வீடு கொடியேற்ற வேண்டும் எனக் கூறும் மத்திய அரசுக்கு, கொடி மேல் இருக்கும் அக்கறை நாட்டு குடி மேல் இல்லை என்றும் சீமான் விமர்சித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com