சினிமா
பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்படும் எஸ்.பி.பி உடல்!
பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்படும் எஸ்.பி.பி உடல்!
மறைந்த பாடகர் எஸ்.பி.பி உடல் அவரது பண்ணை வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட உள்ளது.
கொரோனா பாதிப்பால் கடந்தமாதம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
நுங்கம்பாக்கத்திலுள்ள அவரது வீட்டில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள உடல், அவரது பண்ணை வீட்டிற்கு கொண்டுசெல்லப்படவுள்ளது. நாளை திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதால் உடல் அங்கு கொண்டு செல்லப்படுகிறது.