ஆங்கிலேயர் மட்டுமே கலந்துகொண்ட போட்டியில், வடசென்னை குத்துச்சண்டை வீரர்களும் பங்கேற்று வெற்றியும் பெற்றனர். பின்னர் துறைமுகம், வியாசர்பாடி, தண்டையார்பேட்டை என பல பகுதியில் பரம்பரை குத்துச்சண்டை போட்டிகளாகவும், வணிக ரீதியான போட்டிகளாவும் இது உருமாறியது. சார்பட்டா பரம்பரையைச் சேர்ந்த தென் இந்தியாவின் முதல் குத்துச்சண்டை வீரர் கித்தேரி முத்து, பல வீரர்களை உருவாக்கியிருக்கிறார்.