நடிகர் சரத்குமார் நடிக்கும் புதிய படம் - பூஜையுடன் தொடக்கம்

நடிகர் சரத்குமார் நடிக்கும் புதிய படம் - பூஜையுடன் தொடக்கம்
நடிகர் சரத்குமார் நடிக்கும் புதிய படம் - பூஜையுடன் தொடக்கம்

நடிகர் சரத்குமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.

இயக்குநர் திருமலை பாலுச்சாமி இயக்கத்தில் நடிகர் சரத்குமார் நடிக்கும் புதிய படத்தை தயாரிப்பாளர் ரோஷ் குமார் தயாரிக்கிறார். பெயரிடப்படாத திரைப்படத்தின் பூஜை இன்று துவங்கியது. இப்படத்தில் சரத்குமார் மற்றும் சுஹாசினி மணிரத்னம் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் ரோஷ்குமார் பேசுகையில், ''முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் படமாக இந்த படம் இருக்கும். மேலும், இந்த காலக்கட்டதிற்கு தேவையான கருத்துகளை உணர்த்தும் வகையில் படத்தின் கதைஅமைந்துள்ளது. மண்சார்ந்த கதாபாத்திரத்திற்கு நடிகர் சரத்குமார் சரியாக இருப்பார் என தோன்றியது. இயக்குநரும் அதையே விரும்பினார். நடிகர் சரத்குமார் இந்த கதையை கேட்டவுடன், ஆர்வமாக உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார்."

இந்த படத்தின் மீனாட்சி என்ற முதன்மை கதாபாத்திரத்தில் சுஹாசினி மணிரத்னம் நடிக்கிறார். இயக்குநர் திருமலை பாலுச்சாமி இந்தக்கதையை மிக நேர்த்தியாகவும், இதுவரை மக்களுக்கு சொல்லபடாத விஷயத்தை, சொல்லும் விதமாகவும் அமைத்துள்ளார். இப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும் ஒரு சிறந்த திரைப்படமாக இருக்கும் எனும் நம்பிக்கை உள்ளது'' என்றார்.

இப்படத்தில் சரத்குமார் நாயகனாக நடிக்க, அஷ்வதி நாயகியாக நடிக்கிறார். நந்தா, சுஹாசினி, சிங்கம் புலி, சித்திக், கஞ்சா கருப்பு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வேத்சங்கர் சுகவனம் இசையமைக்கிறார். தொரட்டி படத்திற்கு ஒளிப்பதிவு செய்து புகழ்பெற்ற குமார் ஶ்ரீதர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை செய்கிறார். சண்டை பயிற்சி விக்கி வினோத்குமார் செய்ய, கலை இயக்கத்தை ஶ்ரீமன் பாலாஜி கவனிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com