தனிக்காட்டு ராஜா மீது கவனம் செலுத்தும் சந்தானம்!

தனிக்காட்டு ராஜா மீது கவனம் செலுத்தும் சந்தானம்!
தனிக்காட்டு ராஜா மீது கவனம் செலுத்தும் சந்தானம்!

காமெடி நடிகராக ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வந்த சந்தானம், கதாநாயகனாக உயர்ந்த பிறகும் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். 
தற்போது அரை டஜன் படங்களை கையில் வைத்திருக்கும் அவர், ஓடி ஓடி உழைக்கணும், சக்கைப்போடு போடு ராஜா, மன்னவன் வந்தானடி, உள்ளிட்ட பட படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்த சர்வர் சுந்தரம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் மேலும் பல இயக்குநர்கள் அவரிடம் கதை சொல்லி வருகின்றனர். தற்போது வரை கமிட் ஆகியுள்ள படங்களை முடித்துவிட்டு கடந்த ஆண்டு சொந்தத் தயாரிப்பில் அறிவித்த ’தனிக்காட்டு ராஜா’படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறாராம். ரூ.17 கோடி பட்ஜெட் படம் என்பதாலும், வலுவான திரைக்கதை, அதிகப்படியான கிராஃபிக்ஸ் பணிகள் என்பதாலும், இந்தப்படத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதால் தள்ளிப்போட்டு வந்தாராம். இப்போது மீண்டும் தனிக்காட்டு ராஜா படத்தை தொடங்க தயாராக இருக்கும் அவர், புதிதாக வேறுபடங்களில் கமிட் ஆவதை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. தனிக்காட்டு ராஜா படத்தை சேர்ந்து தயாரிக்க முன்னணி தயாரிப்பாளர்கள் தயாராக இருப்பதால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தப்படத்தை ராசுமதுரவனிடம்  துணை இயக்குநராக இருந்த பச்சையப்பா ராஜா இயக்க இருக்கிறார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com