பிரபுதேவா படத்தின் மூலம் திரைத்துறையில் கால்பதிக்கும் சந்தானத்தின் மகன்!

பிரபுதேவா படத்தின் மூலம் திரைத்துறையில் கால்பதிக்கும் சந்தானத்தின் மகன்!
பிரபுதேவா படத்தின் மூலம் திரைத்துறையில் கால்பதிக்கும் சந்தானத்தின் மகன்!

நடிகர் பிரபுதேவா நடிக்கும் படத்தில் நடிகர் சந்தானத்தின் மகன் நிபுன் அறிமுகமாகவுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குநர் ராகவன் இயக்கத்தில் ‘மஞ்சப்பை’ படம் வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டுக்களை குவித்தது. அடுத்து, ஆர்யாவை வைத்து கடம்பன் படத்தை இயக்கியிருந்தார் ராகவன். தற்போது, தனது மூன்றாவது படமாக பிரபுதேவாவை வைத்து இயக்கவிருக்கிறார். இப்படத்தில்தான், சந்தானத்தின் மகன் நிபுன் அறிமுகமாகிறார்.

தற்போது, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘பஹிரா' படத்தில் நடித்துவரும் பிரபுதேவா அடுத்ததாக ராகவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் நிபுனைச் சுற்றித்தான் கதை அமைக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது. காமெடி நடிகராக அறிமுகமான சந்தானம் தற்போது ஹீரோவாக மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். டிக்கிலோனா படம் அவரது நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com