செல்வ ராகவன்-கீர்த்தி சுரேஷ் இணையும் ‘சாணிக் காயிதம்’ படத்தின் ஷூட்டிங் துவக்கம்!
செல்வ ராகவன் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சாணி காயிதம்’ படத்தின் ஷூட்டிங் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியாகி சிறந்த படத்தொகுப்பிற்கான தேசிய விருதை வென்ற ‘ஆரண்ய காண்டம்’ படத்தில் உதவி இயக்குநராகவும், நடிகை ரித்திகா சிங்கிற்கு சிறப்பு தேசிய விருது கிடைத்த சுதா கொங்கராவின் ‘இறுதிச்சுற்று’ படத்தில் டயலாக் போர்ஷனை எழுதிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தற்போது, செல்வராகவனையும் கீர்த்தி சுரேஷையும் வைத்து ‘சாணிக் காயிதம்’ படத்தை இயக்கவிருக்கிறார்.
இவரது இயக்கத்தில் ‘ராக்கி’ என்ற படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இதன் ட்ரைலர் பாராட்டுகளை குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று முதல் சாணிக்காயிதம் படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியுள்ளது. புகைப்படங்களுடன் கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.