தயாரிப்பாளருடன் டாப்ஸிக்கு தொடர்பு..? வதந்தி பரப்பும் நடிகை

தயாரிப்பாளருடன் டாப்ஸிக்கு தொடர்பு..? வதந்தி பரப்பும் நடிகை
தயாரிப்பாளருடன் டாப்ஸிக்கு தொடர்பு..? வதந்தி பரப்பும் நடிகை

ஆடுகளம் நாயகி டாப்ஸியின் ஆட்டம் தமிழில் நிலைகொள்ளாததால் ஹிந்திக்குத் தாவினார். கணிசமான படங்களை கையில் வைத்துள்ள அவர், வருண் தவாருடன் ஜுத்வா-2 படத்தில் ஜோடிபோட்டு வருகிறார். மற்றொரு நாயகியாக  ஜாக்குலின் ஃபெர்னாண்டஸும் நடிக்கிறார்.  இந்த நிலையில்தான் ஹீரோயின்கள் இருவருக்குமிடையே ஈகோ தலைவிரித்தாடியுள்ளது. படப்பிடிப்பு பாதிக்கப்பட்டு விடுமோ என அஞ்சி இருவரையும் சமாதானம் செய்து வைக்க முயற்சித்தும் ஈகோ யுத்தம் முடிவுக்கு வரவில்லை என்கிறது படக்குழு.  இந்த நிலையில்தான் அந்த பொல்லாத வதந்தியைக் கிளப்பி விட்டிருப்பதாக புகாரில் சிக்கியிருக்கிறார் ஜாகுலின். ‘டாப்ஸி தயாரிப்பாளருடனும், இயக்குநருடனும் நெருக்கம் காட்டுகிறார். அதனால் ஒரிஜினல் ஸ்கிரிப்டை கைவிட்டு டாப்ஸியின் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து மாற்றுகிறார்கள். தயாரிப்பாளர் சஜித் நடியடவாலா  டாப்ஸியின் ‘ஸ்பெஷல் ஃப்ரண்ட்’ ஆகிவிட்டார் என இருவரையும் இணைத்து வெளிப்படையாகவே பேட்டி தந்து வருகிறார் ஜாகுலின் பெர்னாண்டஸ். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com