அருண் மாதேஸ்வரனின் ‘ராக்கி’ பட வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய நயன்தாரா, விக்னேஷ் சிவன்

அருண் மாதேஸ்வரனின் ‘ராக்கி’ பட வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய நயன்தாரா, விக்னேஷ் சிவன்
அருண் மாதேஸ்வரனின் ‘ராக்கி’ பட வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய நயன்தாரா, விக்னேஷ் சிவன்

அருண் மாதேஸ்வரனின் ‘ராக்கி’ படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ்!

நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ’ரெளடி பிக்சர்ஸ்’  இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள ‘ராக்கி’ படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியாகி சிறந்த படத்தொகுப்பிற்கான தேசிய விருதை வென்ற ‘ஆரண்ய காண்டம்’ படத்தில் உதவி இயக்குநராகவும், நடிகை ரித்திகா சிங்கிற்கு சிறப்பு தேசிய விருது கிடைத்த சுதா கொங்கராவின் ‘இறுதிச்சுற்று’ படத்தில் டயலாக் போர்ஷனை எழுதிய இயக்குநருமான அருண் மாதேஸ்வரன் தற்போது, செல்வராகவனையும் கீர்த்தி சுரேஷையும் வைத்து ‘சாணிக் காயிதம்’ படத்தை இயக்கி வருகிறார்.

இவரது இயக்கத்தில் ‘ராக்கி’ என்ற படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இதன், வித்தியாசமான ட்ரைலர் பாராட்டுக்களை குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ராக்கி படத்தில் தரமணி நடிகர் வசந்த் ரவி, பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

ஏற்கனவே, தங்களது ரெளடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா நடித்துவரும் ‘நெற்றிக்கண்’ படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, ‘ராக்கி’ படத்தின் வெளியீட்டு  உரிமையை நயன்தாராவும் தானும் சேர்ந்து  வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com