”சுஷாந்த் ஒரு அரசர் போலதான் வாழ்வார்; அவருடன் பணத்திற்காக பழகவில்லை ”-காதலி ரியா பேட்டி

”சுஷாந்த் ஒரு அரசர் போலதான் வாழ்வார்; அவருடன் பணத்திற்காக பழகவில்லை ”-காதலி ரியா பேட்டி
”சுஷாந்த் ஒரு அரசர் போலதான் வாழ்வார்; அவருடன் பணத்திற்காக பழகவில்லை ”-காதலி ரியா பேட்டி

சுஷாந்த் சிங் ராஜ்புத்க்கு மனம் சம்பந்தமான பிரச்னைகள் இருந்ததாக அவரது காதலி ரியா சக்ரவர்த்தி கூறியுள்ளார்.

இந்தியா டுடே டிவி அவரிடம் பிரேத்யக பேட்டி எடுத்துள்ளது. அந்தப் பேட்டியில் அவர் சுஷாந்த் சிங் ராஜ்புத் உடன் சென்ற யூரோப் பயணம் மற்றும் அந்த சமயத்தில் சுஷாந்த் சந்தித்த மனநல பிரச்னைகள் குறித்து விரிவாக பகிர்ந்துள்ளார்.

”நாங்கள் யூரோப்புக்கு விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது சுஷாந்த் தனிமையச்சத்தின் காரணமாக மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மொடாஃபினில் மருந்தை எடுத்துக்கொண்டார். நாங்கள் பாரிஸில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தோம். ஆனால் சுஷாந்த் 3 நாட்களாக ஹோட்டல் அறையை விட்டு வெளியே வரவில்லை. ஆனால் பயணத்திற்கு முன்பு மிக சந்தோஷமாக இருந்தார். அவர் என்னிடம் இந்தப் பயணம், அவரது உண்மையான முகத்தை எனக்கு காட்டும் என்று கூறினார்.


என்னோடு தெருக்களில் நடந்து வந்த சுஷாந்த், என்னை கலாய்த்து மகிழ்ச்சியாக இருந்தார். உண்மையில் அந்த நாட்களில் நாங்கள் மிக மிக மகிழ்ச்சியாக இருந்தோம். அதே போலதான் சுவிட்சர்லாந்து பயணமும் அமைந்தது. அங்கேயும் அவர் துறுதுறுவென்று இருந்தார். அதன் பின்னர் இத்தாலி சென்றோம். அங்குள்ள பிரபல கோதிக் ஹோட்டலில் நாங்கள் தங்கினோம். ஆனால் அங்கிருந்த அறை எனக்கு சுத்தமாக பிடிக்க வில்லை. உடனே நான் அவரிடம் அங்கிருந்து வேறு ஹோட்டலுக்குச் செல்லலாம் என்று கூறினேன். ஆனால் அவர் என்னை இங்குதான் தங்க வேண்டும் என்று வற்புறுத்தினார். இங்கு என்னோமா இருக்கிறது என்றார்.

அவரது உடல் நிலை அங்கு மோசமடைந்தது. உடனே அவர் மனரீதியான தாக்குதல்களை தொடங்கினார். ஏன் என்னானது என்று வினவினேன். அப்போது அவர் கடந்த 2013 ஆம் ஆண்டு அவர் மன நலப் பிரச்னைகளைச் சந்தித்ததாகவும், அதற்காக மனநல மருத்துவர் ஹரிஷ் செட்டி என்பவரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் கூறினார். மேலும் அதன் பின்னர் அப்பிரச்னை சரியாகி விட்டது என்றும், ஆனால் தற்போது மீண்டும் அந்தப் பிரச்னை தலைத்தூக்கி விட்டதாகவும் கூறினார். உடனே நாங்கள் பயணத்தை முடித்துவிட்டு கிளம்பி விட்டோம்” என்றார்.

எனது சகோதரர் மற்றும் குடும்பத்துடன் சுஷாந்த் நல்ல உறவில் இருந்தார். அவரிடம் சுஷாந்தின் பணம் பரிமாற்றம் தொடர்பான கேள்வி எழுப்பிய போது “ உண்மையாக பாரிஸில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காகதான் நான் அங்கு செல்ல திட்டமிட்டிருந்தேன். சம்பந்தப்பட்ட நிறுவனமும் எனக்கு பாரிஸ் செல்வதற்கான டிக்கெட்டுகளை அனுப்பியிருந்தது. இதனைக் கேள்வி பட்ட சுஷாந்த் இது நமக்கான நேரம் என்று கூறி, அந்த டிக்கெட்டுகளை கேன்சல் செய்து விட்டு, விமானத்தின் முதல் வகுப்பில் எனக்கும் அவருக்கும் டிக்கெட்டுகளை புக் செய்தார். ஹோட்டல்களுக்கும் அவர் தான் பணம் செலுத்தினார். அவர் எப்போதும் ஒரு ராஜாவை போல வாழ வேண்டும் என நினைத்தார்.

இவ்வளவு ஏன் நாங்கள் யூரோப் செல்வதற்கு முன்னர் சுஷாந்த் அவரது ஆண் நண்பர்களுடன் 70 லட்சம் ரூபாய் செலவழித்து தனி விமானத்தில் தாய்லாந்து சென்றனர். அவருக்கு ஒரு நட்சத்திரம் போல வாழ்வதுதான் பிடிக்கும். ஆம் அவர் அந்த மாதிரியான மனிதர் தான். நான் அவருடன் பணத்திற்காக பழக வில்லை. நாங்கள் உண்மையில் ஒரு தம்பதிகளாகவே வாழ்ந்தோம்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com