மகனை ஹீரோவாக்கும் ’ரேனிகுண்டா’ பன்னீர் செல்வம்!

மகனை ஹீரோவாக்கும் ’ரேனிகுண்டா’ பன்னீர் செல்வம்!
மகனை ஹீரோவாக்கும் ’ரேனிகுண்டா’ பன்னீர் செல்வம்!

’ரேனிகுண்டா’ படத்தின் இயக்குநர் பன்னீர் செல்வம், தனது மகனை ஹீரோவாக அறிமுகம் செய்கிறார்.

ஜானி, சனுஷா நடித்த ’ரேனிகுண்டா’ படத்தை இயக்கியவர் பன்னீர் செல்வம். இந்தப் படம் விமர்சகர்களால் அதிகம் கவனிக்கப்பட்டது. இதையடுத்து ஜானி நடித்த ’18 வயது’, விஜய் சேதுபதி, தன்யா நடித்த ’கருப்பன்’ ஆகிய படங்களை இயக்கினார். இவர் இயக்கிய ’நான்தான் சிவா’ விரைவில் வெளியாக இருக்கிறது.

(கருப்பன் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி, பன்னீர் செல்வம்)

இந்நிலையில் தன் மகன் அருண் ஹீரோவாக நடிக்கும் ’தீக்குள் விரலை விட்டாய்’ என்ற படத்தை இயக்குகிறார். மலையாள நடிகை ஹீரோயினாக அறிமுகமாகிறார். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கின்றனர். கணேஷ் ராகவேந்திரா இசை அமைக்கி றார். அர்ஜுன் ஜெனா ஒளிப்பதிவு செய்கிறார். 

சிறு கிராமத்து பின்னணியை கொண்ட இந்தப்படம் காதல், ஆக்‌ஷன், காமெடியை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நாளை தொடங்குகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com