ஷங்கர் - ராம் சரண் படத்தில் இணைந்த ராஷ்மிகா மந்தனா?

ஷங்கர் - ராம் சரண் படத்தில் இணைந்த ராஷ்மிகா மந்தனா?
ஷங்கர் - ராம் சரண் படத்தில் இணைந்த ராஷ்மிகா மந்தனா?

இயக்குநர் ஷங்கர் - ராம் சரண் இணையும் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

’இந்தியன் 2’படப்பிடிப்பு சர்ச்சையில் இருப்பதால் இயக்குநர் ஷங்கர் ‘ராம் சரண் 15’ படத்தை சமீபத்தில் அறிவித்தார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். கார்த்திக் சுப்பராஜ் இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. ஜானி மாஸ்டர் கொரியோகிராஃபி செய்கிறார்.

இந்த நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா இப்படத்தில் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். ராம் சரண் இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்பதால் கியாரா அத்வானி, ராஷ்மிகா மந்தனா என்று இரண்டு ஹீரோயின்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com