‘ஹனுமனின் ஆசியால் குடும்பத்தில் நடந்த நல்ல விஷயம்...’ - மகிழ்ச்சியில் சிரஞ்சீவி குடும்பம்!

‘ஹனுமனின் ஆசியால் குடும்பத்தில் நடந்த நல்ல விஷயம்...’ - மகிழ்ச்சியில் சிரஞ்சீவி குடும்பம்!
‘ஹனுமனின் ஆசியால் குடும்பத்தில் நடந்த நல்ல விஷயம்...’ - மகிழ்ச்சியில் சிரஞ்சீவி குடும்பம்!

தெலுங்கு திரையுலகின் பிரபல முன்னணி நடிகரான ராம்சரண் மற்றும் அவரது மனைவி உபசனா காமினேனி கொண்டேலா, தங்களது முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருப்பதாக, மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் சிரஞ்சீவி. இவரின் மகனான ராம் சரண், ‘சிறுத்த’ என்ற தெலுங்கு படம் வாயிலாக கடந்த 2007-ம் ஆண்டு அறிமுகமானார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான ‘மகதீரா’ படத்தில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம்பெற்றார். ஏனெனில், தெலுங்கில் மட்டுமில்லாது பல்வேறு மாநிலங்களிலும் இவருக்கு ரசிகர்களை பெற்றுத் தந்தப் படம் ‘மகதீரா’. அதன்பிறகு ஏற்றம் இறக்கங்களுடன் இவரது திரை வாழ்க்கை சென்றாலும், மீண்டும் ராஜமௌலியின் இயக்கத்தில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் நடித்து வெற்றிபெற்றதால் பான் இந்தியா நடிகரானார் ராம் சரண்.

இவருக்கு கடந்த 2012-ம் ஆண்டு உபசனா காமினேனி கொண்டேலா என்றப் பெண்ணுடன், பிரபலங்கள் வியக்கும் வகையில் தடபுடலாக திருமணம் நடைபெற்றது. உபசனா காமினேனி தொழில்முனைவோராகவும், சமூக ஆர்வலராகவும் இருந்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை குழந்தைகள் இல்லை என்றாலும், தெலுங்கு திரையுலகில் கொண்டாடப்படும் தம்பதிகளில் இவர்களும் ஒருவர்.

கடந்த ஜூலை மாதம் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ராம்சரணின் மனைவி உபசனா, ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவுடன் கலந்துரையாடியபோது, மக்கள் தொகை பெருக்கத்தை கருத்தில் கொண்டே தாங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்று தெரிவித்தார். மேலும் எங்களது ஆர்.ஆ.ர்ஆர். (relationship, reproduction and role in life) குறித்து மக்கள் கேள்வி எழுப்புவதாகவும் உபசனா கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த ஜக்கி வாசுதேவ், இனப்பெருக்கம் செய்யாத பெண்களைப் பார்ப்பது நல்லது, மனிதனின் கால்தடம் குறைந்தால் புவி வெப்பமடைதல் பற்றி கவலைப்பட தேவையில்லை என்றும் அவர், உபசனாவிற்கு பதிலளித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்த உபசனா காமினேனி, "என் தாயாரிடமும், மாமியாரிடம் விரைவில் இதுதொடர்பாக உங்களை பேச வைப்பேன்" என்று அவரிடம் கூறியிருந்தார். இந்நிலையில், ஹனிமனின் ஆசியால் ராம்சரண் - உபசனா தம்பதி தங்களது முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாகவும், உங்களுடன் இந்த செய்தியை பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சி என்றும், சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால், ராம் சரணின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com