தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜூமுருகனுடன் நடிகர் ஜீவா இணையும் படத்திற்கு ‘ஜிப்ஸி’ என பெயரிடப்பட்டுள்ளது.
தற்போது ராஜூமுருகன் பாலாவின் ‘வர்மா’ படத்திற்கு வசனம் எழுதி இருக்கிறார். இதனையடுத்து இயக்குனர் ராஜூமுருகன் ஜீவாவிடம் ‘ஜிப்சி’ கதையை கூறியுள்ளார். வித்யாசமான கதை என்பதால் ஜீவா நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். இந்தப் படத்தை ‘தேசிங்கு ராஜா’,‘மனம்கொத்திப் பறவை’ஆகிய படங்களை தயாரித்த ‘ஒலிம்பியா மூவீஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கவுள்ளார்.
‘குக்கூ’,‘ஜோக்கர்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ராஜூமுருகன் தற்போது ‘ஜிப்ஸி’மூலம் முதன்முறையாக ஜீவாவுடன் இணைந்துள்ளார். இந்தப் படத்தை இந்தியா முழுவதிலும் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்த இயக்குனர் திட்டமிட்டுள்ளார்.