“சட்டமன்றத் தேர்தலில் ரஜினி மதுரையில் போட்டியிட வேண்டும்” - ரசிகர்கள் தீர்மானம்

 “சட்டமன்றத் தேர்தலில் ரஜினி மதுரையில் போட்டியிட வேண்டும்” - ரசிகர்கள் தீர்மானம்
 “சட்டமன்றத் தேர்தலில் ரஜினி மதுரையில் போட்டியிட வேண்டும்” - ரசிகர்கள் தீர்மானம்

தேர்தல் பணிகள் சம்பந்தமான ஆலோசனை கூட்டம்தான் மதுரையில் நடைபெறுகிறது என ரஜினியின் நண்பரும் ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரியுமான குமரவேல் கூறியுள்ளார்.

மதுரையில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தேர்தல் சம்பந்தமான முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தமிழகத்திலேயே முதன்முதலாக தேர்தல் சம்பந்தமாக நடக்கும் ஆலோசனை கூட்டம் இதுவே. மதுரை தெப்பக்குளம் பகுதியில் நடைபெறும் ரஜினி ரசிகர்களின் ஆலோசனை கூட்டத்தில் மதுரை மாநகர் பொறுப்பாளர் இளங்கோமணி, ரஜினியின் நண்பரும் ஒய்வு பெற்ற காவல்துறை டி.எஸ்.பி.யுமான குமரவேல், மதுரை மாநகர் நிர்வாகிகள் ரபீக், அழகர், பால்பாண்டி, பழனிபாட்சா, உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். ரஜினியின் அரசியல் பிரவேச முதல் மாநாட்டை மதுரையில் நடத்த வேண்டும் எனவும்,

 ரஜினி மதுரை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதியிலேயே போட்டியிட வேண்டும் எனவும் மதுரையில் நடைபெற்ற ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் பங்கேற்ற ரஜினி ரசிகர்கள்,ரஜினி மக்கள் மன்றத்திற்கு விரைவில் மாநகர, மாவட்ட, வார்டு தலைவர், செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆட்களை நியமிக்க வேண்டும் என ரஜினிக்கும், ரஜினி மக்கள் மன்ற தலைமைக்கும் கோரிக்கை வைத்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com