"ரஜினியின் பெயரைச் சொல்லி நிதி வசூலிக்கக் கூடாது" - ரஜினி மக்கள் மன்றம்

"ரஜினியின் பெயரைச் சொல்லி நிதி வசூலிக்கக் கூடாது" - ரஜினி மக்கள் மன்றம்
"ரஜினியின் பெயரைச் சொல்லி நிதி வசூலிக்கக் கூடாது" - ரஜினி மக்கள் மன்றம்

நடிகர் ரஜினிகாந்த்தின் பெயரைச் சொல்லி நிதி வசூல் செய்யப்படுவதாகவும், இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் ரஜினி மக்கள் மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

அரசியலுக்கு வர முடியாத சூழல் குறித்து ரஜினிகாந்த் வெளிப்படையாக, தெளிவாகக் கூறியிருப்பதாக ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பின்னரும் அவரை அரசியலில் ஈடுபடச் சொல்லி போராட்டங்களில் ஈடுபடுப் போவதாக ரசிகர்கள் சிலர் பேசி வருவது, ரஜினிகாந்த்தை மேலும் நோகடிக்கச் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டங்களுக்காக சிலர் நிதி வசூல் செய்வதாக தகவல் கிடைத்திருப்பதாகவும், இது வருந்தத்தக்கது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மன்ற நிர்வாகிகளும் ரசிகர்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று ரஜினி மக்கள் மன்றத்தின் அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com