காத்திருக்கும் ராஜேஷ்.. சிக்கலில் நடிகர் சந்தானம்!

காத்திருக்கும் ராஜேஷ்.. சிக்கலில் நடிகர் சந்தானம்!
காத்திருக்கும் ராஜேஷ்.. சிக்கலில் நடிகர் சந்தானம்!

இயக்குநர் ராஜேஷ் இயக்கும் படத்தில் சந்தானம் நடிக்க உள்ளதாக தேனாண்டாள் ஸ்டுடியோ நிறுவனம் அறிவித்துள்ளது. 

இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் வெளிவந்த ‘சிவா மனசுல சக்தி’ படத்திலிருந்து ’வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ வரை அனைத்து படங்களிலும் சந்தானம் நகைச்சுவை நடிகராக நடித்து வந்தார். அந்தப் படங்களில் சந்தானத்தின் நகைச்சுவை பெரியளவில் பேசப்பட்டது.
அதன்பிறகு, சந்தானம் ஹீரோவாகவே நடித்து வருகிறார். இந்நிலையில் ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தேனாண்டாள் நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று ராஜேஷ் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தேனாண்டாள் ஸ்டுடியோ நிறுவனத்தின் செயல் அதிகாரி ஹேமா ருக்மணி தனது ட்விட்டர் பக்கத்தில்,‘சந்தானம் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும், இதுகுறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும்‘என தெரிவித்துள்ளார். ஆனால், ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம் நடிக்க இருப்பதாக பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டிருந்தாலும் இன்னும் அடுத்தகட்டத்தை நோக்கி செல்லவில்லை. காரணம் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள சர்வர் சுந்தரம் ரிலீசாவதில் தாமதமாகி வருகிறது.

அப்படத்தை தயாரித்த கெனன்யா பிலிம்ஸ் திருடன் போலீஸ், ஒரு நாள் கூத்து ஆகிய படங்களில் ஏற்பட்ட நஷ்டத்தால் சர்வர் சுந்தரம் படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் மன்னவன் வந்தானடி, படப்பிடிப்பும் பாதியில் நிற்கிறது. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சந்தானம் நடிக்க இருந்த ஒரு படமும் பணிகளை தொடராமல் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில், சசி இயக்கத்தில் ஒரு படம், பச்சையப்பன் ராஜா இயக்க இருக்கும் தனிக்காட்டு ராஜா ஆகிய படங்களில் சந்தானம் ஒப்பந்தமாகி இருக்கிறார். ஆக, சந்தானம் நடித்துள்ள சர்வர் சுந்தரம் படம் வெளியானால் மட்டுமே அடுத்தடுத்த படங்களை தொடரும் நிலைக்கு சந்தானம் தள்ளப்பட்டுள்ளார்.   

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com