“பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர்தான் ரஜினி” - ராகவா லாரன்ஸ்

“பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர்தான் ரஜினி” - ராகவா லாரன்ஸ்
“பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர்தான் ரஜினி” - ராகவா லாரன்ஸ்

பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர்தான் ரஜினிகாந்த் என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசியது சர்ச்சையாகியுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தான் மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்து விட்டார்.

இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து கருத்து பதிவிட்டுள்ளார். அதில், “எனக்கு அரசியல் தெரியாது! ஆனால் அண்ணன் சூப்பர் ஸ்டாரைப் பற்றி எனக்கு மிக நன்றாகவே தெரியும்! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பொறுத்தவரை, யார் மனதையும் நோகும்படி பேசக்கூடியவர் அல்ல! ஏன் அவரை திட்டுபவர்களைக் கூட பதிலுக்கு பதில் திருப்பி திட்டாத பண்பாளர்! எதையும் ப்ளான் செய்தோ, திட்டமிட்டோ அவதூறாக பேசக்கூடியவர் அல்ல! ஆனால் பெரியாரைப் பற்றி அவதூறாக பேசிவிட்டதாக கூறுகின்றனர்.

அப்படி பேசக்கூடியவர் என்றால் 2006 ஆம் ஆண்டு பெரியாரின் தீவிரத்தொண்டரான இயக்குநர் வேலு பிரபாகரன், பெரியார் கருத்துக்களை தாங்கி எடுத்த படத்தை வெளியிட முடியாமல் தவித்தபோது, வேலுபிரபாகரனே எதிர்பாராத பெரும் தொகையை கொடுத்து, அப்படத்தை வெளியிட எதற்காக ரஜினி உதவி செய்ய வேண்டும்? பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர்தான் சூப்பர் ஸ்டார் ரஜினி. எனவே அவரை யாரும் தவறாக புரிந்து கொண்டு பேச வேண்டாம் என அவரது மனமறிந்த ரசிகனாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com