“உடைமைகள் ஜப்தி செய்யப்படும்” - சிம்புக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

“உடைமைகள் ஜப்தி செய்யப்படும்” - சிம்புக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

“உடைமைகள் ஜப்தி செய்யப்படும்” - சிம்புக்கு நீதிமன்றம் எச்சரிக்கை
Published on

திரைப்படத்திற்கு வாங்கிய முன்பணத்தை திருப்பி அளிக்காத விவகாரத்தில், நடிகர் சிம்புவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2013ல் பேஷன் (Passion) மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனத்தின் படத்திற்காக பெற்ற 50 லட்சம் ரூபாய்  முன் பணத்தை திருப்பி தரவில்லை என அந்த நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ‘அரசன்’ என்ற படத்திற்காக பெற்ற முன்பணம் தொடர்பாக இந்த வழக்கு தொடரப்பட்டது. 

பணத்தை செலுத்துமாறு, நீதிபதி எம்.கோவிந்தராஜ் ஏற்கனவே 4 வார கால அவகாசம் வழங்கியிருந்தார். ஆனால் இன்னும் பணம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், “வட்டியுடன் சேர்த்து ரூ 85 லட்சத்தை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் உத்தரவாதமாக செலுத்த வேண்டும். தவறினால் சிம்புவுக்கு சொந்தமான கார், மொபைல், பிரிட்ஜ், ஏசி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் ஜப்தி செய்ய வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com