6ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சிவகார்த்திகேயன்

6ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சிவகார்த்திகேயன்
6ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தனது திரைப்பயணத்தின் ஆறாம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறார்.

தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயனை இயக்குநர் பாண்டிராஜ் மெரினா படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தினார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மெரினா திரைப்படம் பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி வெளியானது. இதனை நினைவுக்கூறும் விதமாக சிவா தனது ட்விட்டர் தளத்தில் நேற்று பதிவிட்டிருந்தார். 2012 ஆம் வருடம் இந்த நாளில் தன்னை முதன் முதலில் பெரிய திரையில் பார்த்து ஆச்சரியப்பட்டதாகவும். அது கடந்து 5 வருடம் ஆகியது எனவும் அதில் பல்வேறு அனுபவங்களை தான் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

தனக்கு இந்த வாய்ப்பினை வழங்கிய இயக்குநர் பாண்டிராஜ் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் சிவா பதிவிட்டுள்ளார். மேலும் தனக்கு உறுதுணையாக இருந்து வரும் சகோதரர்கள், சகோதரிகள், தன்னுடன் பணியாற்றும் நண்பர்கள், ரசிகர்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக சிவா பதிவிட்டுள்ளார். இந்த பதிவுவை அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு சிவகார்த்திகேயனை நினைத்து பெருமையடைவதாக குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com