சமூக வலைதளங்களில் கணவர் பெயரை நீக்கியது ஏன்? - பிரியங்கா சோப்ரா விளக்கம்   

சமூக வலைதளங்களில் கணவர் பெயரை நீக்கியது ஏன்? - பிரியங்கா சோப்ரா விளக்கம்   
சமூக வலைதளங்களில் கணவர் பெயரை நீக்கியது ஏன்? - பிரியங்கா சோப்ரா விளக்கம்   
சோஷியல் மீடியாவில் பெயர் மாற்றுவதை இவ்வளவு பெரிய விஷயமாக பார்க்கப்படுவது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது என்று கூறியுள்ளார் பிரியங்கா சோப்ரா.
கடந்த 2000 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றவர் பிரியங்கா சோப்ரா. பின்னர் நடிகர் விஜய்யின் 'தமிழன்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் இந்தியில் கால் பதித்த அவர் தொடர்ந்து அங்கு வெற்றிப் படங்களைக் கொடுத்தார். நிறைய ஆங்கிலப் படங்களிலும் பிரியங்கா நடித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு தன்னை விட 10 வயது இளையவரான பாப் பாடகர் நிக் ஜோனாஸை, பிரியங்கா சோப்ரா காதலித்து கரம் பிடித்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் பிரியங்கா சோப்ரா தனது சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து தனது கணவர் பெயரை நீக்கினார். இதனால் இருவரும் விவாகரத்து செய்யப் போகிறார்களா என ரசிகர்கள் சந்தேகம் கிளப்பினர். ஆனால் பிரியங்கா தரப்பு இதனை மறுத்தது. இதுகுறித்து பிரியங்கா சோப்ராவின் தாய் மதுவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "அவை வீண் தகவல்கள், அவற்றை எல்லாம் நம்பாதீர்கள்" என்று கூறினார்.
இந்த நிலையில் பிரியங்கா சோப்ரா தனது பெயர் மாற்றத்தைப் பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். "எனக்குத் தெரியாது. பயனர்பெயர் எனது ட்விட்டருடன் பொருந்த வேண்டும் என்று நான் விரும்பினேன். இது இவ்வளவு பெரிய விஷயமாக பார்க்கப்படுவது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. மக்களுடன் பழகுங்கள். இது சமூக ஊடகங்கள், நண்பர்களே. அமைதியாக இருங்கள்" என்றார்.
பிரியங்கா சோப்ரா நடித்த ஆங்கிலப் படமான 'மேட்ரிக்ஸ் 4' நேற்று (டிச.22) உலகமெங்கும் வெளியானது. இந்தப் படத்தின் பிரீமியர் ஷோ விழாவில் நிக் ஜோனாஸின் பெற்றோருடன் பிரியங்கா சோப்ரா கலந்து கொண்ட புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com