24 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகிறது பிரியா பவானிசங்கரின் ‘Blood Money’

24 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகிறது பிரியா பவானிசங்கரின் ‘Blood Money’
24 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகிறது பிரியா பவானிசங்கரின் ‘Blood Money’

பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள Blood Money என்ற திரைப்படம் 24-ம் தேதி நேரடியாக ஓ.டி.டியில் வெளியாகிறது.

தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றிய பிரியா பவானி சங்கர் தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். இவர் நடிப்பில் Blood Money என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் குவைத் நாட்டில் கொலை வழக்கில் சிக்க வைக்கப்படும் இரு தமிழர்களை, ஒரு செய்தி நிறுவனம் எப்படி காப்பாற்றுகிறது என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.  இந்த திரைப்படத்தை சர்ஜுன் இயக்கியுள்ளார்.

90 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த திரைப்படத்தை ஜீ5 ஓ.டி.டி தளம் வரும் 24ஆம் தேதி வெளியிடுகிறது. இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட படக்குழுவினர், Blood Money திரைப்படம் நிச்சயம் அனைவரையும் கவரும் என கூறினர். குறிப்பாக முக்கிய பிரச்சினை குறித்து இந்த திரைப்படத்தில் கூறியிருப்பதாகவும், அது நிச்சயம் ரசிகர்களை சென்றடையும் எனவும் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com