சல்மான் கானை மீண்டும் இயக்குகிறார் பிரபுதேவா!

சல்மான் கானை மீண்டும் இயக்குகிறார் பிரபுதேவா!
சல்மான் கானை மீண்டும் இயக்குகிறார் பிரபுதேவா!

சல்மான் கான் நடிக்கும் இந்தி படத்தை பிரபுதேவா மீண்டும் இயக்குகிறார்.

சல்மான் கான், சோனாக்‌ஷி சின்ஹா, டிம்பிள் கபாடியா, அனுபம் கெர் உட்பட பலர்
நடித்திருந்த இந்தி படம், ‘தபாங்’.  அபினவ் காஷ்யப் இயக்கி இருந்த இந்தப் படத்தை சல்மான் சகோதரர் அர்பாஸ் கான் தயாரித்திருந்தார். 2010 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் வசூலில் சாதனை படைத்திருந்தது. இந்தப் படத்தில் சல்புல் பாண்டே என்ற போலீஸ் இஸ்பெக்டர் கேரக்ட ரில் நடித்திருந்தார் சல்மான். இது, தமிழில் தரணி இயக்கத்தில், சிம்பு நடிக்க, ’ஒஸ்தி’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. ஆனால் ஓடவில்லை. 

’தபாங்’ படத்தின் இரண்டாம் பாகம் 2012-ல் வெளியானது. இதில் ஹீரோயினாக சோனாக்‌ஷி சின்ஹாவே நடித்திருந்தார். வில்லனாக பிரகாஷ் ராஜ் நடித்திருந்தார். சல்மானின் சகோதாரர் அர்பாஸ் கான் தயாரித்து, இயக்கியிருந்தார். இந்தப் படமும் ஹிட்டானது. இதையடுத்து இதன் மூன் றாம் பாகத்தை எடுக்க இருக்கின்றனர். இந்தப் படத்தை அர்பாஸ்கான் தயாரிக்கிறார். பிரபுதேவா இயக்க இருக்கிறார். 

சல்மான் கான் நடித்த ’வான்டட்’ படத்தை பிரபுதேவா இயக்கி இருந்தார். இது தெலுங்கில் ஹிட்டான ’போக்கிரி’ படத்தின் ரீமேக். தொடர் தோல் விகளால் தவித்துக் கொண்டிருந்த சல்மான் கானுக்கு அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதன் பிறகு அவர் கேரியர், டாப்புக்கு சென்றது. இந்நிலையில் சல்மான் கானை பிரபுதேவா மீண்டும் இயக்குகிறார். மூன்றாவது முறையாக சோனாக்‌ஷி ஹீரோயினாக நடிக்கிறாரா என்பது தெரியவில்லை.

படம் பற்றி சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கான் கூறும்போது, ‘’ இந்தப் படம் பற்றி பல்வேறு தகவல்கள் உண்மைக்கு மாறாக வெளியா கின்றன. படத்தை பிரபுதேவா இயக்குவது உறுதியாகி இருக்கிறது. இது நொய்டாவில் நடந்த உண்மை கதை என்று கூறிவருகிறார்கள். கதை பற்றி எதுவும் சொல்ல இயலாது. ஷூட்டிங் இன்னும் சில மாதங்களில் தொடங்கும். வேறு எதுவும் முடிவாகவில்லை’’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com