மீண்டும் இணைந்த பிரபாஸ்- அனுஷ்கா: லண்டனில்’பாகுபலி’ டீம்

மீண்டும் இணைந்த பிரபாஸ்- அனுஷ்கா: லண்டனில்’பாகுபலி’ டீம்
மீண்டும் இணைந்த பிரபாஸ்- அனுஷ்கா: லண்டனில்’பாகுபலி’ டீம்

’பாகுபலி’ படம் லண்டனின் புகழ்பெற்ற ராயல் ஆல்பர்ட் தியேட்டரில் திரையிடப்பட்டதை அடுத்து, ராஜமவுலி, பிரபாஸ், அனுஷ்கா, ராணா உள்ளிட்ட படக்குழுவினர் அதில் கலந்துகொண்டனர்.

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் நடித்து சூப்பர் ஹிட்டான ’பாகுபலி’. இரண்டு பாகங்கள் வெளியாகி இரண்டுமே மெகா ஹிட்டானது. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழி களில் வெளியான இந்தப் படம் வசூலிலும் சாதனை படைத்தது. இதையடுத்து ஜப்பான், சீனாவிலும் வெளியானது. இந்தப் படம், பிரபாஸை மெகா ஹீரோவாக மாற்றியுள்ளது.

இந்நிலையில், இந்தப் படக்குழு லண்டனில் மீண்டும் சந்தித்துள்ளது. அங்குள்ள புகழ்பெற்ற ராயல் ஆல்பர்ட் தியேட்டரில் ’பாகுபலி’ படம் ஆங்கில சப் டைட்டிலுடன் திரையிடப்பட்டது. இங்கு ஆங்கிலம் தவிர வேறு எந்த மொழி படமும் திரையிடப் பட்டதில்லை. முதல் முறையாகத் திரையிடப்பட்ட இந்திய படம் இதுதான் என்று கூறப்படுகிறது.

இதில் பங்கேற்க, படக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து இயக்குனர் ராஜமவுலி, தயாரிப்பாளர் ஷோபு, பிரபாஸ், அனுஷ்கா, ராணா ஆகியோர் அங்கு சென்றனர். இவர்கள் லண்டன் வீதிகளில் ஜாலியாக சுற்றினர். பின்னர் ரசிகர்களுடன் இணைந்து ராயல் ஆல்பர்ட் தியேட்டரில் படத்தை கண்டு ரசித்தனர்.

இதுபற்றி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரபாஸ், பாகுபலி டீமுடன் லண்டனில் இணைந்துள்ளேன். ராயல் ஆல்பர்ட் தியேட்டரில் பாகுபலியை நேரடியாக பார்க்க ஆவலாக இருக்கிறேன்’ என்று தெரிவித்திருந்தார். அவரது இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com