சுமார் 29 பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகை நிறுவனங்கள் மீது நடிகை ஷில்பா ஷெட்டி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்ததாக மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு விவகாரத்தில் தன்னைக் குறித்து தவறாக சித்தரித்ததாக பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகை நிறுவனங்கள் மீது நடிகை ஷில்பா ஷெட்டி அவதூறு வழக்கு ஒன்றை மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார்.
சுமார் 29 பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகை நிறுவனங்கள் மீது அவர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது நீதிமன்றம்.