அங்கு சௌஜன்யாவின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது. அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் காவல் துறையினர் கைப்பற்றினர். அதில், பெற்றோர், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ள சௌஜன்யா, தனது இயற்பெயரான சவி மாதப்பா என்ற பெயரில் கையொப்பமிட்டுள்ளார். அந்த கடிதத்தில், உடல்நலக் குறைவாலும் சினிமா துறையில் தற்போதைய சூழல் காரணமாகவும், கடந்த பல நாட்களாக சிரமப்பட்டு வந்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில் இந்த முடிவை எடுப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை என்று சௌஜன்யா குறிப்பிட்டுள்ளார். தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.