கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகை பூஜா ஹெக்டே

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகை பூஜா ஹெக்டே
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகை பூஜா ஹெக்டே

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் நடிகை பூஜா ஹெக்டே.

’கொரோனாவிலிருந்து, நம்மை காக்கும் ஆயுதமாக தடுப்பூசிகள் விளங்குகின்றன’ என்று மருத்துவத்துறையினர் பரிந்துரைக்கின்றனர். அதன்படி, இந்திய மக்கள் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு வருகின்றனர். இந்த இரண்டு தடுப்பூசிகள் மட்டுமே புழக்கத்தில் இருந்த நிலையில், மூன்றாவதாக டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துக்கு ரஷ்யாவிலிருந்து ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இறக்குமதி செய்யவும், தயாரிக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்தது.

அதன்படி, ஸ்புட்னிக்–வி தடுப்பூசியும் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், நடிகை பூஜா ஹெக்டே இன்று கொரோனா தடுப்பூசியை லீலாவதி மருத்துவமனையில் செலுத்திக்கொண்டார். தமிழில் விஜய்யுடன் தற்போது ‘பீஸ்ட்’ படத்தில் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com